×

மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்

திருப்பூர், நவ 3: மத்திய மாநில அரசுகளை கண்டித்து ஆதித்தமிழர் பேரவையினர் நேற்று கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வடக்கு மாவட்ட செயலாளர் மணி தலைமை வகித்தார், ஆதித்தமிழர் பேரவையின் மாநில துணை பொதுசெயலாளர் விடுதலை செல்வன், மாநில துணை செயலாளர் சோழன், தந்தை பெரியார் திரவிடர் கழக மாவட்ட தலைவர் முத்துக்குமார், திராவிட விடுதலை கழக மாவட்ட தலைவர் முகில்ராசு ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு ஒட ஒதுக்கீடு வழங்காமல் இருக்கும் மத்திய அரசை கண்டித்தும்,  அதனை ஆதரிக்கும் அதிமுக அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.

Tags : Demonstration ,state ,governments ,
× RELATED நீட் தேர்வை மாநில அரசுகளின்...