×

காலி பணியிடங்களை நிரப்பகோரி வருவாய்த்துறை அலுவலர்கள் பணியை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்


ஜெயங்கொண்டம், அக். 21:வருவாய்த்துறையில் காலியாக உள்ள அரசு பணியிடங்களை நிரப்ப வேண்டும். வருவாய் ஆய்வாளராக உள்ள பணியிடங்களை துணை வட்டாட்சியர் பதவி உயர்வு அளிக்க வேண்டும். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் குடும்பநல நிதியை ரூ.10 லட்சமாக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தாசில்தார் அலுவலகம் முன் வருவாய்த்துறை அலுவலர்கள் மாலை 5 மணிக்கு முன் ஒரு மணி நேரம் பணி புறக்கணிப்பு செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட பொருளாளர் குமணன் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி மாநில செயற்குழு உறுப்பினர் பகவதி பேசினார். வட்ட செயலாளர் ராஜேஷ் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் அரசு வருவாய்த்துறை அலுவலர் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

Tags : Demonstration ,
× RELATED காங்.கட்சியினர் ஆர்ப்பாட்டம்