×

ராம்கோ சிமெண்ட் சார்பில் ₹1.5 லட்சத்தில் படுக்கை, மெத்தைகள் வழங்கல்

வாழப்பாடி, அக்.16:வாழப்பாடி அருகே சிங்கிபுரம் ராம்கோ சிமெண்ட் சார்பில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பேளூரில் உள்ள அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு, சுகாதாரத்துறையுடன் இணைந்து கொரோனா சிகிச்சை பெறுவோரின் நலனில் அக்கறை கொண்டு ₹1.5 லட்சம் மதிப்புள்ள படுக்கை மெத்தை, தலையணைகள் வழங்கப்பட்டது. இதனை ராம்கோ நிறுவனத்தின் மூத்த பொது மேலாளர் லட்சுமணன், வாழப்பாடி வட்டார மருத்துவ அலுவலர் பொன்னம்பலத்திடம் வழங்கினார். பணியாளர் துறை மேலாளர் மணிவேல், மூத்த மேலாளர் சுரேஷ்குமார், மனிதவள துறை அலுவலர்கள் சீனிவாசன், முனியசாமி மற்றும் ஏழுமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED நண்பர் மீது ஆசிட்டை ஊற்றிய வெள்ளிப்பட்டறை தொழிலாளி