×

மணிகண்டம், மணப்பாறை பகுதியில் காய்கறி பயிர் சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை

திருவெறும்பூர், அக்.16: தோட்டக்கலை துறை உதவி இயக்குனர்திவ்யாவெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஆண்டுதோறும் அனைத்து முக்கிய காய்கறிகள் நுகர்வோர்களுக்கு கிடைப்பதை உறுதி செய்யும் விதமாக அவற்றை பயிரிடும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.2 ஆயிரத்து 500 ஊக்கத்தொகை வழங்கப்படும். அதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியம் மற்றும் மணப்பாறை பகுதியில் தோட்டக்கலை பயிர்களை பயிர் செய்துள்ள விவசாயிகள் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற காய்கறி பயிர்களை சாகுபடி செய்வதற்கு கொள்முதல் செய்த விதை, நடவு செடிகளின் விலைப்பட்டியல், கிராம அலுவலர்கள் அளித்த அடங்கல் சான்று மற்றும் சாகுபடி செய்யப்பட்ட வயலின் புகைப்படம் ஆகிய விபரங்களுடன் மணிகண்ட வட்டார விவசாயிகள் அந்தப் பகுதியில் உள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்திலும், மணப்பாறை பகுதி விவசாயிகள் அந்த வட்டார பகுதியில் உள்ள தோட்டக்கலைத் துறை உதவி இயக்குனர் அலுவலகத்திலும் விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் அதிகபட்சமாக ஒரு விவசாயிக்கு 2 ஹெக்டேர் வரை ஊக்கத்தொகை அளிக்கப்படும். இவ்வாறு அவர்அதில் தெரிவித்துள்ளார்.

Tags : area ,Manapparai ,
× RELATED குஜராத் ராஜ்கோட் பகுதியில் வணிக வளாக...