×

உபி சம்பவத்தை கண்டித்து பகுஜன் சமாஜ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


பெரம்பலூர், அக்.2: பெரம்பலூரில் உபி சம்பவத்தை கண்டித்து பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தி உபி முதல்வரின் உருவ பொம்மை எரிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் தலித் பெண் மீது கூட்டு பாலியல் வன்புணர்வு சம்பவத்தில் ஈடுபட்ட குற்ற வாளிகளைக் கைதுசெய்ய வலியுறுத்தி பெரம்பலூர் பழைய பஸ் ஸ்டாண்டு காந்தி சிலைமுன்பு, பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பாக நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலச் செயலாளர் வழக்கறிஞர் காமராசு தலைமை வகித்தார். நகர பொறுப்பாளர் ராஜமாணிக்கம், மகளிரணி மூக்காயி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் செல்லதுரை, மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் சுல்தான் மைதீன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த ராஜேந்திரன், ரகுபதி, இளவரசன், ஆட்டோ ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். குன்னம் சட்டமன்ற தொகுதி தலைவர் புதூர் சற்குரு நன்றி கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தின் முடிவில் உத்திரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உருவ பொம்மையை எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : protests ,Bahujan Samaj Party ,UP incident ,
× RELATED வாக்களிக்கும் உரிமையை பயன்படுத்துங்கள்: மாயாவதி அழைப்பு