அரூர், செப்.25: அரூரில், தமிழியக்கம் சார்பில் பெரியார், அண்ணா பிறந்த நாள் விழா கருத்தரங்கு நடந்தது. தகடூர் அதியமான் வரவேற்றார். திமுக மாவட்ட மருத்துவ அணி துணை அமைப்பாளர் டாக்டர் சுரேஷ்குமார் தலைமை வகித்தார். இதில் தமிழியக்க நிர்வாகிகள் அப்துல்காதர், கீரை பிரபாகரன், செம்முனி, முல்லைஅரசு, செவ்வேள்முருகன், சுகுமார், ராஜகுமாரன், பொன்னுரங்கம், குறிஞ்சி சீதாராமன், நடராஜன், கலையரசி, ஜெயமணி, முத்தமிழ்செல்வி மற்றும் பலர் கலந்து கொண்டு பேசினர். தீபாசிவகுமார் நன்றி கூறினார்.