×

வண்ணாரப்பேட்டை, மண்ணடியில் குடியுரிமை போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு

தண்டையார்பேட்டை: வண்ணாரப்பேட்டை மண்ணடியில்  குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை எதிர்த்து நடைபெற்ற  போராட்டம்ஒத்திவைக்கப்படுவதாக போராட்டக்காரர்கள் கூறியுள்ளனர். .மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த (சிஏஏ) சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை வண்ணாரப்பேட்டை, லாலாகுண்டா பகுதியில் கடந்த மாதம் 14ம் தேதி இரவு முதல் கடந்த 33 நாட்களாக இஸ்லாமிய அமைப்பினர் தொடர் கண்டன போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதேபோல் மண்ணடி பகுதியிலும் கடந்த 33 நாட்களாக கண்டன போராட்டம் நடைபெற்று வந்தது.

கொரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலியாக, தமிழகத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்தி வருகிறது. இதையடுத்து, பொது இடங்களில் அதிகளவு மக்கள் ஒன்றுகூட வேண்டாம் என அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனால் வண்ணாரப்பேட்டை, லாலாகுண்டா பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு  தேசியகீதம் பாடி போராட்டத்தை ஒத்திவைத்தனர். இதேபோல், மண்ணடியில் நடைபெற்ற சிஏஏவுக்கு எதிரான போராட்டம் நேற்று காலை முதல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டதாக போராட்ட குழுவினர் தகவல் தெரிவித்தனர்.

Tags :
× RELATED சமுதாய வளர்ச்சிக்கு சிறப்பாக...