×

ஷோபாவில் இருந்து விழுந்து சிறுவன் பலி

பாபநாசம், மார்ச் 18: பாபநாசம் அடுத்த அய்யம்பேட்டை குச்சிபாளைய தெருவை சேர்ந்த கூலி தொழிலாளி தினேஷ். இவரது நான்கரை வயது மகன் யோகி. யுகேஜி படித்து வந்தான். நேற்று முன்தினம் மாலை யோகி வீட்டில் ஷோபாவில் அமர்ந்திருந்தான். அப்போது எதிர்பாராதவிதமாக ஷோபாவில் இருந்து கீழே விழுந்தான். பேச்சு மூச்சு இல்லாமல் மயங்கி கிடந்த யோகியை அய்யம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். அங்கு உடலை பரிசோதித்த டாக்டர், யோகி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இதுகுறித்து அய்யம்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Shobha ,
× RELATED பெங்களூருவில் தேர்தல்...