×

மழை வேண்டி பிரார்த்தனை

கம்பம், மார்ச் 18: கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டி பரமசிவத்தேவர் தெருவில் உள்ள மகளிர் குழுவினர் மழைவேண்டி நேற்று மாலை பிரார்த்தனை நடத்தினர். இதையொட்டி அம்மன் படத்திற்கு தேங்காய், பழம் வைத்து குலவையிட்டு அபிஷேகம் செய்து, மழை வரவேண்டும், விவசாயம் செழிக்க வேண்டும் என வேண்டிக்கொண்டனர். பின்னர் அப்பகுதியில் கூழ் காய்ச்சி, பிரார்த்தனைக்கு வந்த பொதுமக்களுக்கு வழங்கினர். மகளிர் குழு நடத்திய இந்த நிகழ்ச்சியில் அப்பகுதியிலுள்ள பெண்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED பயிர்களை அழிக்கும் படையப்பா மூணாறு விவசாயிகள், மக்கள் பீதி