×

வெங்கம்பூர் வரதராஜா பெருமாள் கோயிலில் கொரோனா விழிப்புணர்வு பேனர்

ஈரோடு, மார்ச் 18: வெங்கம்பூர் வரதராஜா பெருமாள் கோயிலில் கொரோனா வைரஸ் தடுப்பு குறித்து பக்தர்களுக்கு எச்சரிக்கை அளிக்கும் வகையில் விழிப்புணர்வு பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் கொடுமுடி வெங்கம்பூரில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் வரதராஜா பெருமாள் வகையறா கோயில்கள் உள்ளன. இந்த கோயிலில், வரதராஜா பெருமாள், சோழிஸ்வரர், ராஜமாரியம்மன், அங்காளம்மன், பொன்காளியம்மன் ஆகிய 5 சன்னதிகள் உள்ளன. இந்த கோயிலில் கொரோனா வைரஸ் குறித்து பக்தர்களுக்கு எச்சரிக்கை ஏற்படுத்தும் விதமாக 5 கோயில்களின் பரிகாரத்திற்கு முன்புறமும் எச்சரிக்கை விழிப்புணர்வு பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. அதில், கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல், இருமல், சளி, மூச்சடைப்பு இருக்கும் என்றும், இந்நோயில் இருந்து காத்துக்கொள்ள கைகளை 30 நிமிடம் கழுவ வேண்டும். சளி, இருமல், காய்ச்சல் உள்ளவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளை அணுகி சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும். அறிகுறிகள் இருந்தால் அவர்கள் பொது இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு எச்சரிக்கை வாசகங்கள் குறிப்பிடப்பட்டிருந்தது.

Tags : Corona ,Varadaraja Perumal Temple ,Venkampur ,
× RELATED ராசிபுரம் ஸ்ரீ பொன் வரதராஜ பெருமாள்...