×

மதுவிற்ற 2 பேர் கைது 58 பாட்டில்கள் பறிமுதல்

தர்மபுரி, மார்ச் 18: காரிமங்கலம் அருகேயுள்ள பேகரஅள்ளி பகுதியில் சிலர் மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்வதாக, காரிமங்கலம் போலீசாருக்கு தகவல் வந்தது. இதன்பேரில் போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது,  பேகரஅள்ளி பேருந்து நிறுத்தத்தில் செல்வம் (31), ராஜேந்திரன் (47) ஆகிய இரண்டு பேரும் மதுபாட்டில்கள் பதுக்கி விற்பனை செய்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் செல்வத்திடம் இருந்து 30 மதுபாட்டில்களும், ராஜேந்திரனிடம் 28 மதுபாட்டில்களும் என மொத்தம் 58 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா