×

பாய்லர் வெடித்த விபத்தில் மேலும் ஒருவர் பலி

காரிமங்கலம், மார்ச் 18: காரிமங்கலம் அருகே பெரியாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷன். இவர் பைபாஸ் சாலையில் அட்டை பெட்டி தொழிற்சாலை வைத்து நடத்தி வருகிறார். இங்கு 15க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 12ம் தேதி மாலை கம்பெனியின் பாய்லர் மற்றும் பைப்லைன் வெடித்துள்ளது. இந்த விபத்தில், பணியில் இருந்த திண்டுக்கல்லை சேர்ந்த அய்யப்பன்(24), பெரியாம்பட்டியை சேர்ந்த சசிகுமார்(31), அதே பகுதியை சேர்ந்த தமிழ்செல்வன்(27) உட்பட 4பேர் படுகாயமடைந்தனர்.

இதில், திண்டுக்கல் தாடிகொம்பு பகுதியை சேர்ந்த அய்யப்பன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதில் படுகாயமடைந்த சசிக்குமார், தமிழ்செல்வனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சிகிச்சை பெற்று வந்த பெரியாம்பட்டியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதுகுறித்து காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : boiler accident ,
× RELATED பாய்லர் வெடித்த விபத்தில்...