×

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து 32ம் நாளாக முஸ்லிம்கள் காத்திருப்பு போராட்டம்

மதுரை, மார்ச் 17: குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக மதுரையில் 32 நாளாக நேற்றும் முஸ்லிம்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் முஸ்லிம்கள் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். மதுரை மகபூப்பாளையத்தில் கடந்த பிப்.14ல் துவங்கிய காத்திருப்பு போராட்டம், நேற்று 32ம் நாளாக இப்பகுதியில் உள்ள ஜின்னா திடலில் தொடர்ந்தது.

இதில் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்ட 600க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக, பல பகுதிகளில் முஸ்லிம்கள் மேற்கொண்டுள்ள தொடர் போராட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதே போல், மதுரை மகபூப்பாளையத்தில் நடந்து வரும் தொடர் போராட்டமும் ரத்து செய்யப்படும் என்ற தகவல் பரவியது.

Tags : Muslims ,
× RELATED மோடி மீது எடுக்கப்படும் நடவடிக்கை...