×

ஆவின் பாலகத்தை உடைத்து நெய், பால், பணம் திருட்டு

திருப்பரங்குன்றம், ஏப். 25: திருப்பரங்குன்றத்தை அடுத்துள்ள தனக்கன்குளம் முல்லைநகரில் வசித்து வருபவர் சுந்தரேசன் (59)/ இவர் முல்லை நகர் மெயின் ரோட்டில் ஆவின் பாலகம் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் வியாபாரம் முடித்து பாலகத்தை பூட்டிக்கொண்டு வீட்டிற்கு புறப்பட்டு சென்றார். பின்னர் நேற்று அதிகாலையில் லாரியில் வரும் பால் பாக்கெட்டுகளை வாங்கி வைப்பதற்காக பாலகத்திற்கு வந்தார். அப்போது பாலகத்தின் மேற்பகுதி உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். அவர் உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த பால், நெய் உள்ளிட்ட ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள பொருகள் மற்றும் இருப்பு வைத்திருந்த ரூ.2 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடுபோனது தெரியவந்தது. இதுகுறித்து சுந்தரேசன் திருநகர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து இத்திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

The post ஆவின் பாலகத்தை உடைத்து நெய், பால், பணம் திருட்டு appeared first on Dinakaran.

Tags : Tiruparangunram ,Sundaresan ,Dhanakankulam Mullainagar ,Thiruparangunram ,Mullainagar ,
× RELATED கிரிவலப் பாதையில் உள்ள செடி, கொடி, மரங்களில் திடீரென தீ!