×

கொரோனா வைரஸ் எதிரொலி கிருஷ்ணகிரி அணை மூடப்பட்டது

கிருஷ்ணகிரி, மார்ச் 17: கொரோனா வைரஸ் எதிரொலியால் கிருஷ்ணகிரி அணை மூடப்பட்டது. இதனால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் முக்கிய பொழுதுபோக்கு இடமாக கிருஷ்ணகிரி அணை உள்ளது. இங்குள்ள பூங்கா மற்றும் அணை தண்ணீரில் குளிக்கவும் கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்ட மக்கள் மட்டுமின்றி கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இதனால் இப்பகுதியில் உள்ள மீன் கடைகளில் எப்போதும் கூட்டம் அலைமோதும். இந்நிலையில், தற்போது நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இந்த நோய் பரவாமல் தடுக்கும் நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. அதன்படி, கிருஷ்ணகிரி அணையும் நேற்று பகல் 12 மணி முதல் மூடப்பட்டு, சுற்றுலா பயணிகளை அணை மற்றும் பூங்கா பகுதியில் நுழைய விடவில்லை. இதனால் அணையை சுற்றி பார்க்க வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். அணை மீண்டும் திறக்கப்படும் தேதி தெரிவிக்கப்படவில்லை என அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் தெரிவித்தனர்

Tags : Corona ,dam ,Krishnagiri ,
× RELATED வைகை அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தம்