×

அண்ணாநகர் காவலர் குடியிருப்பில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு முகாம்

அண்ணாநகர்: அண்ணாநகர் காவலர் குடியிருப்பில் நேற்று முன்தினம் மாலை கொரோனா வைரஸ் தடுப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இம்முகாமுக்கு அண்ணாநகர் சரக துணை ஆணையர் முத்துசாமி தலைமை தாங்கி துவக்கி வைத்தார். இதில், கொரோனா வைரஸ் தாக்குதலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து காவலர்கள் குடும்பத்தினரிடம் தனியார் மருத்துவமனை டாக்டர் விளக்கி கூறினார்.

அப்போது அவர், கொரோனா வைரஸ் தொற்றின் முதல் அறிகுறியாக காய்ச்சல், இருமல், சளி, உடல் சோர்வு மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டால், அவர்கள் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு சென்று உரிய பரிசோதனைகளுடன் சிகிச்சை பெறலாம் என்பது உள்பட பல்வேறு தடுப்பு முறைகள் குறித்து விளக்கி, காவலர்கள் குடும்பங்கள் மற்றும் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இதில் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணா உள்பட காவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Coronavirus Awareness Camp ,Anna Nagar Guard Apartments ,
× RELATED வல்லநாட்டில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு முகாம்