×

வல்லநாட்டில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு முகாம்

வைகுண்டம், மார்ச் 2: வல்லநாடு பகுதி பள்ளிகளில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு முகாம் நடந்தது. வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவப்பிரிவு சார்பில் வல்லநாடு தெற்கு ஊராட்சி ஒன்றிய பள்ளியில் சித்த மருத்துவ முகாம், தொழுநோய் விழிப்புணர்வு முகாம் மற்றும் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பெரியசாமி தலைமை வகித்தார். மருந்தில்லா மேற்பார்வையாளர் ராஜன், பள்ளி தலைமையாசிரியை ட்லைட் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சித்த மருத்துவர் செல்வக்குமார் சித்த மருத்துவத்தில் வைரஸ் நோய் எதிர்ப்பு மருந்துகள் குறித்தும், மேற்பார்வையாளர் ராஜன் தொழுநோய் கண்டறியும் முறைகள் குறித்தும் எடுத்துரைத்தனர். ஆசிரியர் வேலாயுதம் நன்றி கூறினார். இதுபோன்று மணக்கரையிலுள்ள தனியார் நிறுவன பணியாளர்களுக்கு வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவப்பிரிவு சார்பில் சித்த மருத்துவ விழிப்புணர்வு முகாம் சித்த மருத்துவர் செல்வக்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பெரியசாமி, மாவட்ட நல கல்வியாளர் அந்தோணிசாமி, மருந்தில்லா மேற்பார்வையாளர் ராஜன், சுகாதார ஆய்வாளர் சாகிர், நிறுவன பணியாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். மனிதவள மேம்பாட்டு அலுவலர் லட்சுமிநாராயணன் நன்றி கூறினார்.

Tags : Coronavirus Awareness Camp ,
× RELATED தமிழக-கேரள எல்லைப்பகுதியில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு முகாம்