×

கண்மாயில் குளித்தவர் மாயம்

மதுரை, மார்ச் 13: மதுரை வண்டியூர் கண்மாய்க்கு நேற்று மாலை 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் குளிக்கச் ெசன்றார். அப்போது கண்மாய் சேற்றில் சிக்கி, வெளியே வர முடியாமல் தவித்த அவர் தண்ணீருக்குள் மூழ்கியதாக கூறப்படுகிறது.
தகவலறிந்த தல்லாகுளம் தீயணைப்பு படையினர், நிலைய அலுவலர் சிவக்குமார் தலைமையில் சுமார் 3 மணி நேரம் அவரை தேடினர். ஆனா, அவரை மீட்க முடியவில்லை. இன்றும் அவரை தேடும் பணியில் தீயணைப்பு படையினர் ஈடுபட உள்ளனர்.

Tags :
× RELATED மதுரையில் தொடர் சோதனை ஸ்மோக் பிஸ்கெட்...