×

கல்குவாரியில் மண் சரிந்து விழுந்து தொழிலாளி பலி

பெரம்பலூர், மார்ச் 13: பெரம்பலூர் அருகே கல்குவாரியில் மண் சரிந்து விழுந்து பணியில் ஈடுபட்டிருந்த இளைஞர் மண்ணுக்குள் புதைந்து உயிரிழந்தார். சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த துரைசாமி மகன் செம்மலை (36). இவர் பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா வெங்கலம் கிராமத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான கல்குவாரியில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் பயன்படுத்தாமல் குவாரியில் செம்மலை நேற்று பணியில் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது எதிர்பாராதவிதமாக அவர் மீது மண் சரிந்து விழுந்தது. இதில் மண்ணில் புதைந்த செம்மலை சம்பவ இடத்திலேயே பலியானார். அரும்பாவூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று செம்மலை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Kalquari ,
× RELATED மதுரை மாவட்டம் பாலமேடு அருகே...