காவேரிப்பட்டணம், மார்ச் 13: காவேரிப்பட்டணம் ஒன்றியம் காமராஜ் நகர் பள்ளியில் தேசிய அறிவியல் தின விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் ஜீவா தலைமை தாங்கினார். வட்டார வளமைய கல்வி அதிகாரிகள் அம்பிகேஸ்வரி, காவேரி, பெருமாள், சரவணன், சபரி முன்னிலை வகித்தனர். சபரி சின்னசாமி, ஊராட்சி மன்ற உறுப்பினர் சுதா பவுன்ராஜ், அண்ணாமலை, ஆசிரியை சூர்யா மற்று–்ம பெற்றோர் கலந்து கொண்டு பரிசாக புத்தகங்கள் வழங்கி பாராட்டினர்.