×

கொக்கலாடி ஊராட்சியில் 300 கால்நடைகளுக்கு தடுப்பூசி

திருத்துறைப்பூண்டி, மார்ச் 13:கொக்கலாடி ஊராட்சியில் 300 கால்நடைகளுக்கு கோமாரிநோய் தடுப்பூசி போடப்பட்டது.திருத்துறைப்பூண்டியில் தேசிய கோமாரி நோய் தடுப்பூசி திட்டத்தின்கீழ் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் கொக்கலாடி ஊராட்சியில் நேற்று நடைபெற்றது. கால்நடை மருத்துவர் ராமலிங்கம் தலைமையில் உதவி மருத்துவர்கள் காவ்யா, விஸ்வேந்தர், சுந்தர் ஆகியோர் தலைமையில் 300 கால்நடைகளுக்கு கோமாரிநோய் தடுப்பூசி போட்டனர்.
இதில் ஊராட்சி மன்ற தலைவர் வசந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED தில்லைவிளாகம் கிராமத்தில் புதிய நூலக...