காஞ்சிபுரம், மார்ச் 12: பக்தவச்சலம் கல்வி அறக்கட்டளையின் கீழ் செயல்படும் பட்டம்மாள் அளகேசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் காஞ்சி கல்வியியல் கல்லூரி கணினி அறிவியல் துறை சார்பாக தேசிய அளவிலான கருத்தரங்கம் நடந்தது.மனிதனுக்கும் கணினிக்கும் உள்ள தொடர்பு என்ற தலைப்பில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் பக்தவச்சலம் கல்வி அறக்கட்டளை தலைவர் வாமனன் தலைமை தாங்கினார். பட்டம்மாள் அளகேசன் கல்லூரி முதல்வர் ராஜ்குமார் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக ஆடெக்ஸ் சொலுயூஷன்ஸ் டெக்னாலஜி, சென்னை குழுமத்தின் முதன்மை நிர்வாக அலுவலர் விஷ்வேஷ் பக்ஹரே, எஸ்ஆர்எம் பல்கலைக்கழக கணினி அறிவியல் துறை பேராசிரியர் ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.இதில் பேராசிரியர் மனோகரன், லைப் போட் பவுண்டேஷன் உறுப்பினர்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். இறுதியாக கணினி அறிவியல் துறை பேராசிரியர் கிரிஜா சக்தி நன்றி கூறினார்.