×

முத்துப்பேட்டையில் பதற்றம் பள்ளிவாசல், முக்கிய எல்லையில் ஏராளமான போலீஸ் குவிப்பு

முத்துப்பேட்டை, மார்ச் 12: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் கடந்த மூன்று மாதங்களாக குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பலவேறு போராட்டங்கள் நடந்து வருகிறது. இந்த நிலையில் குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டங்களில் பேசிவந்த அய்யாவழி பாலமுருகன் கைது, கோவையில் பள்ளி வாசலில் பெட்ரோல் குண்டு வீச்சு, கோவை எஸ்டிபிஐ மாவட்ட செயலாளர் மீது தாக்குதல் சம்பவங்களால் முத்துப்பேட்டையில் பதற்றம் ஏற்பட்டுள்ளதும், இதனால் போராட்டங்கள் நடைபெற போவதாக வந்த தகவலையடுத்தும் முத்துப்பேட்டையில் அனைத்து பள்ளி வாசல்கள் மற்றும் பதற்றம் நிறைந்த முக்கிய பகுதிகள் ஊர் எல்லைகள் ஆகிய பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் முத்துப்பேட்டையில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Muttapettai School ,
× RELATED முத்துப்பேட்டையில் பள்ளிவாசல் அருகே...