×

நடந்து சென்ற இளம்பெண்ணின் உதட்டை கடித்த வாலிபர்

வேப்பூர், மார்ச் 12: வேப்பூர் அருகே தனியாக நடந்து சென்ற பெண்ணின் உதட்டை கடித்த வாலிபர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகிலுள்ள என்.நாரையூர் கிராமத்தை சேர்ந்த ஒரு இளம்பெண் நேற்று முன்தினம் வேப்பூர் வார சந்தைக்கு வந்து காய்கறிகள் வாங்கிக்கொண்டு பேருந்தில் ஏறி நாரையூர் பஸ் நிறுத்தத்தில் இறங்கி வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்அப்போது பின் தொடர்ந்து வந்த அதே கிராமத்தை சேர்ந்த பொன்னன் மகன் தமிழ்வாணன் (26) என்ற வாலிபர் திடீரென்று வலுக்கட்டாயமாக இளம்பெண்ணின் கையை பிடித்து இழுத்து உதட்டை கடித்துள்ளார். மேலும் கூச்சல் போட்டால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதனால், பயந்துபோன இளம்பெண் என்னை காப்பாற்றுங்கள் என்று கூச்சல் போடவே அருகே ராமதாஸ் என்பவரின் சவுக்கு காட்டில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் ஓடிவந்தனர். இதைக்கண்ட தமிழ்வாணன் இருட்டில் ஓடிச்சென்று மாயமாகிவிட்டார். பின்னர் இளம்பெண்ணை பாதுகாப்பாக வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்இதுகுறித்து இளம்பெண் அளித்த புகாரின்பேரில் வேப்பூர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் கலியமூர்த்தி விசாரணை செய்து வருகிறார். தனியாக நடந்து சென்ற பெண்ணின் உதட்டை கடித்து வாலிபர் கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : walker ,
× RELATED திகலர் பர்பிள்: விமர்சனம்