×

பழநியில் குடிநீர் தட்டுப்பாட்டுக்கு தேவை முன்னெச்சரிக்கை

பழநி, மார்ச் 12: பழநியில் வாசன் பாசறை செயற்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் மணிக்கண்ணன் தலைமை வகிக்க, வட்டார தலைவர் கனகசபாபதி, நகர தலைவர் சண்முகநாதன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பழநி பகுதி அணைகளின் நீர்மட்டம் குறைந்துள்ள நிலையில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மின்தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கோடை விடுமுறை நெருங்கி வரும் நிலையில் பழநி வழித்தடத்தில் ராமேஸ்வரம், கன்னியாகுமரி, பெங்களூரு, கொச்சின் உள்ளிட்ட ஊர்களுக்கு தினசரி ரயில் இயக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் நகராட்சி கவுன்சிலர்கள் பத்மினி முருகானந்தம், சுரேஷ், சுந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED நிலக்கோட்டை எத்திலோடுவில் உழவன் செயலி விழிப்புணர்வு