×

அதிக விளைச்சல் பெற்றிட பயறு வகைகளில் டிஏபி கரைசல் பயன்படுத்தலாம்: வேளாண் அதிகாரிகள் ஆலோசனை

 

பழநி, ஏப்.30: பயறு வகைகளில் அதிக விளைச்சல் பெற்றிட டிஏபி கரைசல் பயன்படுத்த வேண்டுமென வேளாண் அதிகாரிகள் ஆலோசனை வழங்கி உள்ளனர். பழநி அருகே தொப்பம்பட்டி பகுதியில் சுமார் 10 ஆயிரம் எக்டேருக்கு மேல் பயிறு வகைகள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மானாவாரியாக பயிரிடப்பட்டுள்ள பயிறுவகைகளில் நல்ல தரமான மணிகளை பெற வேளாண் அதிகாரிகள் கூறியதாவது: தரமான பயிர்களை பெற்றிடவும், கூடுதல் மகசூல் பெற்றிடவும் டி.ஏ.பி. கரைசலை இருமுறை தெளிக்க வேண்டும்.

ஒரு ஏக்கருக்கு 2 கிலோ டி.ஏ.பி. உரத்தினை முதல் நாள் 10 லிட்டர் நல்ல தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். மறுநாள் மாலை ஊற வைத்த கரைசலில் இருந்து தெளித்த நீரை வடித்து எடுத்து, அதனை 190 லிட்டர் நல்ல தண்ணீரில் கலந்து கைத் தெளிப்பான் மூலமாக பூக்கும் தருவாயில் ஒரு முறையும், மறுமுறை மேற்கூறிய முறையில் மீண்டும் 10 முதல் 15 நாள் இடைவெளியிலும், கைத் தெளிப்பான் மூலமாக 200 லிட்டரில் கலந்து தெளிக்க வேண்டும்.

அதன் மூலமாக அதிகப்படியான பூக்களும், திறட்சியான மணிகளும் நல்ல விளைச்சலும் பெறலாம். தற்சமயம் டிஏபி கரைசல் விரிவாக்க மையத்தில் வழங்கப்பட்டு வருகின்றது. தேவைப்படும் விவசாயிகள் தங்கள் பகுதி வேளாண்மை உதவி அலுவலரிடம் உரிய விண்ணப்பம் பெற்று வாங்கிக் கொள்ளலாம். இவ்வாறு வேளாண்மை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post அதிக விளைச்சல் பெற்றிட பயறு வகைகளில் டிஏபி கரைசல் பயன்படுத்தலாம்: வேளாண் அதிகாரிகள் ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Palani ,Toppampatti ,Palani.… ,Dinakaran ,
× RELATED பழநி நகராட்சி மக்கள் கவனத்திற்கு