×

காவல் நிலையம் அருகே திடீரென தீப்பிடித்து எரிந்த குற்ற வழக்கு வாகனங்கள்: நிலக்கோட்டையில் பரபரப்பு

 

நிலக்கோட்டை, ஏப்.29: நிலக்கோட்டை காவல் நிலையம் எதிரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குற்ற வழக்குகளில் தொடர்புடைய வாகனங்கள் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நிலக்கோட்டை காவல் நிலையத்தில், நிலக்கோட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நடைபெற்ற குற்றவழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட கார், வேன், இருசக்கர வாகனங்கள், மாட்டுவண்டி என ஏராளமான வாகனங்கள் வத்தலக்குண்டு-மதுரை சாலையில் காவல் நிலையம் எதிர்புறம் உள்ள பழைய பேருந்து நிலைய இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னால் உள்ள இடத்தில் அப்பகுதி மக்கள் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இந்நிலையில் நேற்று மாலை திடீரென வாகனங்கள் நிறுத்திய பகுதியில் தீப்பிடித்தது. சிறிது நேரத்தில் தீ மளமளவென பற்றி எரியத் துவங்கியது. இதைப் பார்த்த காவல் நிலையத்தில் இருந்த போலீசார் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர். இதற்கிடையில் தீ கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது.

இதனால் அருகில் இருந்த தனியார் தண்ணீர் வாகனங்களை பயன்படுத்தி தீயை அணைக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டனர். நீண்ட நேரம் காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனாலும் ஒரு சில வாகனங்கள் தீயில் எரிந்து சேதமாகின.இந்த தீ விபத்து குறித்து நிலக்கோட்டை காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post காவல் நிலையம் அருகே திடீரென தீப்பிடித்து எரிந்த குற்ற வழக்கு வாகனங்கள்: நிலக்கோட்டையில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Nilakottai ,Nilakottai Police Station ,
× RELATED காவல் நிலையம் அருகே திடீரென தீப்பிடித்து எரிந்த குற்ற வழக்கு வாகனங்கள்