×

சேத்துப்பட்டு வட்டத்தில் பட்டா வழங்கும் திட்டத்தில் 2,383 பயனாளிகள் தேர்வு: ஆர்டிஓ தகவல்

பெரணமல்லூர், மார்ச் 11: சேத்துப்பட்டு வட்டத்தில் ஒரு முறை பட்டா வழங்கும் திட்டத்தில் 2,383 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஆர்டிஓ தெரிவித்தார். சேத்துப்பட்டு வட்டத்தில் ஒரு முறை பட்டா வழங்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி, நேற்று ஆர்டிஓ விமலா தலைமையில் தாசில்தார் சுதாகர், மண்டல துணை தாசில்தார் சேகர் மற்றும் வருவாய் ஆய்வாளர் முத்துக்குமார் ஆகியோர் பெரணமல்லூர் அடுத்த அல்லியந்தல் அனாதிமங்கலம், விஷமங்கலம் மற்றும் தெள்ளூர், ராந்தம், தும்பூர் உள்ளிட்ட பகுதிகளில் பட்டா இல்லாமல் குடிசை வீடு கட்டி வசிக்கும் நடுத்தர குடும்பத்தினருக்கு இலவச பட்டா வழங்க நேரில் ஆய்வு செய்தனர். அப்போது, ஆர்டிஓ விமலா கூறுகையில், ‘சேத்துப்பட்டு வட்டத்தில் ஒரு முறை பட்டா வழங்கும் திட்டத்தின் கீழ் 2,383 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு இலவச பட்டா வழங்கப்பட உள்ளது. இதில் முதல் கட்டமாக 561 பயனாளிகளுக்கு விரைவில் பட்டா வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.

Tags : RTO ,
× RELATED மதுரை மாவட்டம் கள்ளிக்குடி உர ஆலையை...