×

வருசநாடு அருகே தார்ச்சாலை அமைக்கும் பணி தொடக்கம் மலைக்கிராமமக்கள் மகிழ்ச்சி

வருசநாடு, மார்ச் 11: வருசநாடு அருகே தினகரன் செய்தி எதிரொலியாக மலைகிராமத்திற்கு தார்ச்சாலை அமைக்கும் பணி தொடங்கியுள்ளதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். வருசநாடு அருகே உள்ள காமராஜபுரம் மலை கிராமம். இங்கு தார்ச்சாலை அமைக்கும் பணி கடந்த ஆறு மாத காலமாக கிடப்பில் போடப்பட்டிருந்தது. இது குறித்து சில தினங்களுக்கு முன்பு தினகரன் நாளிதழில் செய்தி வெளியாகியிருந்தது. இதன் எதிரொலியாக தற்பொழுது புதிய தார்ச்சாலை அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதனால் மலைக்கிராம பகுதியிலுள்ள இந்திராநகர், காமராஜபுரம், உரக்குண்டான்கேணி, பாலசுப்பிரமணியபுரம், கவுண்டர் குடிசை உள்ளிட்ட பகுதி விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இப்பணியின்போது மயிலாடும்பாறை ஒன்றிய பொறியாளர் முகமதுஹாரீஸ், சாலை ஆய்வாளர் ரவிக்குமார், தொழில்நுட்ப உதவியாளர்கள் அழகுராஜா, பிரகாஷ் ஆகியோர் உடன் இருந்தனர். காமராஜபுரம் மலைகிராமவாசி தங்கப்பாண்டி கூறுகையில், நாங்கள் மூன்று தலைமுறையாக இப்பகுதியில் வாழ்ந்து

Tags : tarchal ,hill ,Varushanadu ,countrymen ,
× RELATED சித்ரா பவுர்ணமியையொட்டி வெள்ளியங்கிரி மலையில் குவியும் பக்தர்கள்..!!