×

சிறுவர் ஜெயிலில் மோதல்: 6 பேர் காயம்

மதுரை, மார்ச் 10: மதுரை சிறுவர் ஜெயிலில் ஏற்பட்ட திடீர் மோதலில் 6 பேருக்கு காயம் ஏற்பட்டது. மதுரை காமராஜர் சாலையில் சிறுவர் ஜெயில் உள்ளது. இங்கு குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 17 வயதிற்கு உட்பட 100க்கும் மேற்பட்டவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் மதியம் சாப்பாட்டு வேளையில், இரு தரப்பினருக்கு தகராறு ஏற்பட்டது. அப்போது வார்டன்கள் சத்தம் போட்டு இரு பிரிவினரையும் பிரித்து அனுப்பினர். பின்னர் மாலையில் டிவியில் திரைப்படம் ஒளி பரப்பப்பட்டது. அப்போது ஒரு தரப்பினர் புதிய படத்தை ஒளி பரபரப்புமாறு வார்டனிடம் கூறினர். இதனால் அங்கு மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதலில் ஈடுபட்டனர். இதில், அங்கு இருந்த கம்பு, கற்களால் ஒருவருக்கு ஒருவர் தாக்கி கொண்டனர். தகவலறிந்து வந்த தெப்பக்குளம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த மோதலில் 6 சிறார்கள் காயமடைந்தனர். அவர்களை மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதுதொடர்பாக தெப்பக்குளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Clash ,jail ,
× RELATED நடப்புத் தொடரில் முதல் மோதல்: கொல்கத்தாவை சமாளிக்குமா பஞ்சாப்