×

பள்ளி மாணவன் மாயம்

திருக்கனூர், மார்ச் 5: திருக்கனூர் அருகே உள்ள விநாயகம்பட்டு ஈஸ்வரன்கோயில் தெருவை சேர்ந்தவர் பன்னீர் மகன் ருத்ரன் (14). திருக்கனூரில் உள்ள தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு பள்ளிக்கு சென்ற ருத்ரன் மாலையில் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் தேடிப் பார்த்தனர். ஆனால் கிடைக்கவில்லை. இதையடுத்து பன்னீர் திருக்கனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சப் - இன்ஸ்பெக்டர் குமார் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிந்து மாயமான பள்ளி மாணவனை தேடி வருகின்றனர்.

Tags :
× RELATED விக்கிரவாண்டி அருகே விபத்தில் 2 பேர்...