×

மின்வாரிய ஓய்வூதியர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடக்கிறது

தர்மபுரி, மார்ச் 5: மின்வாரிய ஓய்வூதியர்களின் குறைதீர்க்கும் கூட்டம், நாளை வேலூர் மின்வாரிய அலுவலகத்தில் நடைபெறுகிறது. இது குறித்து மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் பன்னீர்செல்வம் விடுத்துள்ள அறிக்கை:   
தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிர்மான கழக உத்தரவின்படி,வேலூர் மண்டலம் மற்றும் அதன் பகுதியில் உள்ள பிற மின்வாரிய அலுவலகங்களில், பணிபுரிந்து ஓய்வு பெற்ற மின் வாரிய அலுவலர், பணியாளர்களின் குறைகளை நேரில் கேட்டு, தீர்த்து வைத்து உரிய ஆலோசனை வழங்கவும் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி நடப்பாண்டிற்கான மின் வாரிய ஓய்வூதியர் குறை தீர்க்கும் கூட்டம் நாளை (6ம் தேதி) காலை 11 மணியளவில் வேலூர் மின் பகிர்மான வட்டம், மத்திய அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. எனவே, மின் வாரியத்திலிருந்து ஓய்வு பெற்ற அலுவலர் மற்றும் பணியாளர்கள் மேற்கண்ட வாய்ப்பினை பயன்படுத்தி தங்களின் குறைகளை தீர்த்துக் கொள்லாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Electricity Pension Grievance Meeting ,
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா