×

தனியார் துறை சார்பில் வேலை வாய்ப்பு முகாம்

தர்மபுரி, மார்ச் 5: தர்மபுரி மாவட்ட கலெக்டர் மலர்விழி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது: தனியார் துறை நிறுவனங்களும், தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரர்களும் நேரடியாக சந்திக்கும் வேலைவாய்ப்பு முகாம் நாளை (6ம் தேதி) மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது. முகாமில் தனியார் துறை நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான நபர்களை தேர்வு செய்து கொள்ளலாம். இதன் மூலம் வேலைவாய்ப்பு பெறுவோருக்கு, வேலை வாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. அரசுத் துறைகளில் அவர்களது பதிவு மூப்பின்படி நேர்முகத் தேர்வு அனுப்பப்படும். முகாமில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு  விற்பனையாளர், மார்க்கெட்டிங் எக்ஸிக்யூட்டிவ், சூபர்வைசர், மேலாளர், கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர், தட்டச்சர், அக்கவுண்டன்ட், கேசியர், மெக்கானிக், போன்ற பணிகளுக்கு டிப்ளமோ, பட்டபடிப்பு மற்றும் பள்ளிப்படிப்பு முடித்த ஆண், பெண் மற்றும் அனைத்து வித கல்வித்தகுதிக்கும் ஆட்கள் தேவை என தெரிவித்துள்ளன.  எனவே, தகுதியும், விருப்பம் உள்ளவர்கள் நாளை காலை 10 மணிக்கு, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ள தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Placement Camp ,
× RELATED அம்பேத்கர் கலை கல்லூரியில் மெகா வேலை வாய்ப்பு முகாம்