×

தாந்தோணிமலை-ராயனூர் சாலையில் கூடுதல் மின் விளக்குகள் அமைக்க வலியுறுத்தல்

கரூர், மார்ச் 5: கரூர் நகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலை- ராயனூர் பிரதான சாலையில் கூடுதலாக மின்விளக்குகள் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கரூர் நகராட்சிக்குட்பட்ட ராயனூர், தாந்தோணிமலை பகுதியை இணைக்கும் வகையில் பிரதான சாலை போக்குவரத்து வசதி உள்ளது. இருதரப்பில் இருந்தும் தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் இந்த சாலையில் சென்று வருகின்றன. மேலும், இந்த சாலையின் இடையில் குறிஞ்சி நகர், வெங்கடேஷ்வரா நகர் போன்ற நகர்ப்பகுதிகளும் உள்ளன.

இந்நிலையில், ராயனூர்-குறிஞ்சி நகர் இடையே ஒரே ஒரு மின்விளக்கு மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. மற்ற பகுதிகள் எல்லாம் இரவு நேரங்களில் இருட்டு மயமாகவே காணப்படுகிறது. இதனால், விஷ ஜந்துக்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. மேலும் வாகன ஓட்டிகளின் தடுமாற்றம் போன்ற நிகழ்வுகள் தொடர்கதையாக நடைபெற்று வருகிறது. எனவே, அனைத்து தரப்பினர்களின் கோரிக்கையை ஏற்று இந்த பகுதியில் கூடுதலாக மின் விளக்கு வசதி ஏற்படுத்தி தர தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் எதிர்பார்க்கின்றனர்.

Tags : road ,Thanthonimalai-Rayanur ,
× RELATED குமுளி மலைச்சாலையில் வந்த போது பிரேக்...