×

மாணவரை தாக்கிய வழக்கில் தேடப்பட்ட 3 பேர் கைது

புதுச்சேரி, மார்ச் 4: புதுவை முதலியார்பேட்டை தேங்காய்திட்டில் வசிப்பவர் முனிதாஸ் மகன் மாறன் (18). பிளஸ் 2 மாணவரான இவர், அப்பகுதியில் நடந்த மயான கொள்ளை நிகழ்ச்சியில் நண்பர் சஞ்சய், தீனாவுடன் பங்கேற்றார். அப்போது அதே பகுதியை சேர்ந்த கார்த்தி, புவனேஸ், மோதிஷ், தட்சிணாமூர்த்தி உள்ளிட்டோர் முன்விரோதம் காரணமாக மாறனையும், அவரது நண்பர்களையும் வழிமறித்து தாக்கி கத்தியால் குத்தியதாக தெரிகிறது.

இது தொடர்பாக முதலியார்பேட்டை போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், புவனேஸ் உள்ளிட்ட 4 பேர் கும்பல் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்குபதிவு செய்த போலீசார் புவனேசை உடனே கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவான தேங்காய்திட்டு பகுதியைச் சேர்ந்த கார்த்திக், மோதிஷ், தட்சிணாமூர்த்தி உள்ளிட்டோரை தேடி வந்தனர்.அவர்கள் 3 பேரையும் நேற்று முன்தினம் கைது செய்த போலீசார், விசாரணைக்குபின் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

Tags : student ,
× RELATED சிவில் சர்வீஸ் தேர்வில் போட்டிகள்...