×

(தி.மலை) மரத்தில் பைக் மோதி விவசாயி பலி

வந்தவாசி, மார்ச் 4: வந்தவாசி அடுத்த ஆனைபோகி கிராமத்தை சேர்ந்தவர் வேலு(42), விவசாயி. இவர் நேற்று முன்தினம் மாலை காய்கறிகளை வாங்கிக் கொண்டு வல்லம் கூட்ரோட்டில் இருந்து வீட்டிற்கு பைக்கில் சென்றார். அப்போது, செய்யாறில் இருந்து சேத்துப்பட்டு நோக்கிச்சென்ற வாகனத்திற்கு வழிவிட இடதுபுறமாக பைக்கை திருப்பியுள்ளார். இதில் நிலை தடுமாறிய பைக், சாலையோரம் உள்ள புளியமரத்தின் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட வேலு படுகாயமடைந்து சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்த வடவணக்கம்பாடி போலீசார் விரைந்து சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, வேலுவின் உறவினர் ஞானசந்திரன் வடவணக்கம்பாடி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், எஸ்ஐ ஜெயராமன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags : Bike accident ,
× RELATED பைக் விபத்தில் வாலிபர் பலி