×

பைக் விபத்தில் வாலிபர் பலி

தூத்துக்குடி, மார்ச் 5: தூத்துக்குடியில் நடந்த பைக் விபத்தில் வாலிபர் பரிதாபமாக இறந்தார். தூத்துக்குடி முடுக்குகாடு பகுதியைச் சேர்ந்த பலவேசமுத்து மகன் சக்திவேல் (26). இவரும், இவரது  நண்பரான சவேரியார்புரத்தை சேர்ந்த மாரிக்கண்ணுவும் (30) தூத்துக்குடியில் செயல்படும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர். கடந்த இருநாட்களுக்கு முன்னர் இரவு, இவர்கள் இருவரும் பணி முடிந்து பைக்கில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

திருச்செந்தூர் ரோடு, லெவிஞ்சிபுரம்  திருப்பம் அருகே வந்தபோது பேரிகார்டில் பைக் மோதியது. இதில் தூக்கிவீசப்பட்டு படுகாயமடைந்த இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சக்திவேல் பரிதாபமாக இறந்தார். மாரிக்கண்ணு சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து தென்பாகம் போலீசார்  வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : bike accident ,
× RELATED (தி.மலை) மரத்தில் பைக் மோதி விவசாயி பலி