ஒட்டன்சத்திரம், மார்ச் 3: ஒட்டன்சத்திரம் சக்தி செவிலியர் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடந்தது. சிறப்பு விருந்தினராக மோகன் பிரசாத் கலந்து கொண்டு பிஎஸ்சி நர்சிங் முடித்த மாணவிகளுக்கு பட்ட படிப்பிற்கான சான்றிதழை வழங்கி சிறப்புரையாற்றினார். இதில் தாளாளர் வேம்பணன், துணை தாளாளர் கோகிலா, செயலாளர் சிவக்குமார், கவின்குமார், நவீனா, முதல்வர் ஜானகிதேவி, குப்புச்சாமி, இளங்கோ, தாரணி மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.