×

நன்னடத்தை விதிமீறிய 4 ரவுடிகளுக்கு 348 நாள் சிறை

ெசன்னை: சூளைமேடு என்.எம்.சாலையை சேர்ந்த கார்த்திக் (20), மணிமாறன் (19), வட அகரம் 1வது தெருவை சேர்ந்த கரண் (எ) சாலமன் (20) மற்றும் கிழக்கு நமச்சிவயபுரத்தை சேர்ந்த விதன்குமார் (20) ஆகியோர் மீது சூளைமேடு காவல்  நிலையத்தில் கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.  இதற்கிடையே கடந்த மாதம் கார்த்திக், மணிமாறன், சாலமன், விதன்குமார் ஆகிய 4 பேரும், திருவல்லிக்கேணி துணை கமிஷனர் தர்மராஜன் முன்பு ஆஜராகி,  ஓராண்டுக்கு எந்த குற்ற செயல்களிலும் ஈடுபடமாட்டோம் என்று நன்னடத்தை உறுதி மொழி பத்திரத்தில் கையெழுத்து போட்டனர்.

ஆனால் கடந்த 17ம் தேதி அப்பு மணிகண்டன் மற்றும் 20ம் தேதி கோபி என்பவரை வெட்டிய வழக்குகளில் 4 ரவுடிகளையும் போலீசார் கைது செய்தனர். நன்னடத்தை உறுதி மொழியை மீறி செயல்பட்ட கார்த்திக், மணிமாறன், சாலமன்  ஆகியோருக்கு தலா 348 நாட்கள் சிறை தண்டனையும், அதேபோல், ரவுடி விதன்குமாருக்கு 328 நாள் சிறை தண்டனை வழங்கி துணை கமிஷனர் உத்தரவிட்டார். அதைதொடர்ந்து 4 ரவுடிகளும் புழல் சிறையில் அடைத்தனர்.

Tags :
× RELATED சமுதாய வளர்ச்சிக்கு சிறப்பாக...