×

வாய்க்காலில் மூழ்கி மூதாட்டி பலி

ஈரோடு, மார்ச் 3: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே குளத்துதோட்டம் இந்திராநகர் பகுதியை சேர்ந்தவர் கருப்பாத்தாள் (75). இவர் கடந்த 25 ஆண்டுகளாக தனது கணவர் நடராஜை பிரிந்து தனது மகள் பழனியம்மாள் வீட்டில் வசித்து வந்தார். வயதான நிலையில் கருப்பாத்தாள் மகளிடம் உனக்கு நான் பாரமாக இருக்கிறேன். எனக்கு கடவுள் சீக்கிரம் சாவு தரமாட்டாரா என புலம்பி வந்துள்ளார். மேலும், இவருக்கு சர்க்கரை நோய் உள்ள நிலையில் மாதந்தோறும் சத்தியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 27ம் தேதி சிகிச்சைக்காக சென்ற கருப்பாத்தாள் அங்கிருந்து வீட்டிற்கு வரவில்லை. அவர் எங்கு சென்றார் என்ற விபரங்கள் தெரியாமல் பழனியம்மாள் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தேடினார். இந்நிலையில் நேற்று முன்தினம் கொடிவேரி அணை அருகே தடப்பள்ளி வாய்க்கால் ஷட்டர் பகுதியில் நீரில் மூழ்கிய நிலையில் கருப்பாத்தாள் இறந்து கிடந்தார்.

Tags : Grandfather ,
× RELATED பவானி அருகே கொண்டாடப்பட்ட தாத்தா,...