×

செல்போனை பறித்து வாலிபர் ஓட்டம்

கோவை, மார்ச்.2: கோவை சிவானந்த காலனியை சேர்ந்தவர் பிரசாந்த். இவர் கடந்த ஆறு வருடங்களாக கோவை காந்திபுரத்தில் செல்போன் கடை வைத்து நடத்தி வருகிறார். இவருடைய கடைக்கு நேற்று மாலை வாலிபர் ஒருவர் வந்தார். அப்போது அந்த வாலிபர் தன்னுடைய செல்போனை விற்க வேண்டும் அதற்கு என்ன விலை தருவீர்கள் என்று கேட்டு கொண்டிருந்தார். அவரிடம் பிரசாந்த் தனது செல்போனை கையில் வைத்து கொண்டு பேசிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென அந்த வாலிபர் பிரசாந்தின் கையில் இருந்த செல்போனை பறித்து கொண்டு ஓட்டம் பிடித்தார். பிரசாந்த் துரத்தி சென்று அக்கம்பக்கத்தினர் உதவியுடன் பிடித்து காட்டூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த வாலிபர் செல்போனை பறித்து கொண்டு ஓடிய காட்சிகள் கடையில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் பதிவாகியுள்ளது.


Tags : Plaintiff ,
× RELATED திருமணமான 4 மாதங்களில் 2வது திருமணம் செய்ய முயன்ற வாலிபர் கைது