×

காந்தி கல்வி நிறுவனங்களின் ஆண்டு விழா

சத்தியமங்கலம், மார்ச் 2:  சத்தியமங்கலம் அருகே விண்ணப்பள்ளியில் அமைந்துள்ள காந்தி கல்வி நிறுவனங்களின் ஆண்டு விழா நடந்தது. விழாவிற்கு காந்தி கல்வி அறக்கட்டளை தலைவர் தமிழரன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் அப்துல்ரகுமான், பொருளாளர் கோவிந்தராஜ், இயக்குநர்கள் சுலைமான், அகமது இப்ராகிம், சுப்ரமணியன், கார்த்தி அரசு, உத்தமி, ரேணுகாதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் சிராஜ்தீன் வரவேற்றார். ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். இதில் அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது: தொழில் நிறுவனங்களில் பாலிடெக்னிக் மற்றும் ஐ.டி.ஐ படித்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு அதிக அளவில் உள்ளது. பொறியியல் பட்டம் பெற்ற மாணவர்கள் தற்போது வேலைவாய்ப்பு இல்லாமல் தவித்து வருகின்றனர்.

தொழில் நிறுவனங்களும் பாலிடெக்னிக் மற்றும் ஐ.டி.ஐ முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க தயார் நிலையில் உள்ளனர். எனவே மாணவ மாணவியர் தங்களது எதிர்கால நலனை கருத்தில் கொண்டு அதற்கேற்றாற்போல் வேலைவாய்ப்பு அதிக வாய்ப்பு உள்ள படிப்புகளை தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும் என்று பேசினார்.  இவ்விழாவில் பவானிசாகர் எம்.எல்.ஏ. ஈஸ்வரன் மற்றும் கலைக்கல்லூரி, பாலிடெக்னிக், கல்வியியல் கல்லூரி, ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர்கள், பேராசிரியர்கள் கலந்துகொண்டனர். முடிவில் மாணவ மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது.


Tags : Gandhi ,institutions ,
× RELATED வயநாட்டில் கம்பளகாடு பகுதியில் பிரியங்கா காந்தி ரோடு ஷோ..!!