×

டெல்லி கலவரத்தில் உயிரிழந்தவர்களுக்காக இஸ்லாமியர்கள் சிறப்பு பிரார்த்தனை

உத்தமபாளையம், மார்ச் 2: குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறக்கோரியும், டெல்லி கலவரத்தில் உயிரிழந்தவர்களுக்காகவும், உத்தமபாளையத்தில் இஸ்லாமியர்கள் நோன்பு நோற்று பள்ளிவாசல்களில் சிறப்பு பிரார்த்தனை செய்தனர். உத்தமபாளையத்தில் நைனார் முகமது பெரிய பள்ளிவாசல் மற்றும் கோட்டைமேடு, பைபாஸ் உள்ளிட்ட 14 இடங்களில் தொழுகைக்கான பள்ளிவாசல்கள் உள்ளன. நகரில் உள்ள இஸ்லாமியர்கள் மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். நகரில் வருகிற மார்ச் 8ம் தேதி தேரோட்டம் நடக்க உள்ளதால் நான்கு ரத வீதிகளில் போராட்டங்களை ஒத்தி வைத்துள்ளனர்.

இந்நிலையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராகவும், இஸ்லாமியர்களின் வாழ்வினில் அமைதி நிலவவும், டெல்லியில் வன்முறையில் உயிர்நீத்த இஸ்லாமியர்களுக்கு மறு உலக வாழ்வில் அத்தனை நலன்களும் கிடைக்கவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவிகள் கிடைக்கவும், இதேபோல் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடக்கும் சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டங்களுக்கு வலிமை கிடைத்திடவும், உலகை அச்சுறுத்தும் கொரோனா தாக்குதலில் இருந்து அனைத்து நாடுகளும் மீளவும், இந்தியாவில் இதன் தாக்கம் வந்துவிடக்கூடாது உள்ளிட்ட பல்வேறு தேவைகளை கேட்டு இஸ்லாமியர்கள் நேற்று ஒரு நாள் நபில் நோன்பு நோற்றனர். இன்று (மார்ச் 2) நடக்கும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி உத்தமபாளையம் பைபாஸ் மதீனா பள்ளியில் நடக்கிறது. இதில் சிந்தாமணிப்பட்டி ஹஜ்ரத் சிராஜ்தீன் அகமது சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட உள்ளார்.

Tags : riots ,Muslims ,Delhi ,
× RELATED இஸ்லாமியர்கள் குறித்த பிரதமர்...