×

மண்டல அளவிலான அஞ்சல் குறைதீர் கூட்டம்

சேலம், மார்ச் 2:  மண்டல அளவிலான தபால் குறை தீர் கூட்டம் வரும் 5ம் தேதி நடக்கிறது. இதுதொடர்பாக சேலம் கிழக்கு கோட்டமுதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் முஜிப்பாஷா கூறியிருப்பதாவது: மண்டல அளவிலான மக்கள் குறை தீர் கூட்டம், வரும் 5ம் தேதி காலை 11 மணிக்கு கோவை ஆர்.எஸ்.புரம் தலைமை அஞ்சலக கட்டடத்தின் 2வது மாடியில் நடைபெறுகிறது. இதில், அஞ்சல் தொடர்பான குறை, புகார் இருப்பின் தெரிவிக்கலாம். தவிர, அஞ்சல்துறை தலைவர் மேற்கு மண்டலம், கோவை-641002 எனும் முகவரிக்கு தபாலில் அனுப்பலாம். மணியார்டர், விபிபி., விபிஎல் பதிவு தபால், விரைவு தபால், காப்பீடு தபால் பற்றிய புகார் எனில், அனுப்பி தேதி, முழு முகவரி, பதிவு அஞ்சல் எண், அலுவலக பெயர் இடம் பெற்றிருக்க வேண்டும். சேமிப்பு வங்கி அஞ்சல் காப்பீடு புகார் எனில், கணக்கு எண், பாலிசி எண், வைப்பு தொகையாளரின் பெயர், வசூலிக்கப்பட்ட விவரங்கள் உள்பட வேறு தகவல் இருந்தால், குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : meeting ,
× RELATED காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 95-வது...