×

சேரம்பாடி போலீஸ் ஸ்டேஷன் பகுதியில் குடிநீர் இல்லாமல் மக்கள் தவிப்பு

பந்தலூர், மார்ச் 1: சேரங்கோடு ஊராட்சி சேரம்பாடி போலீஸ் ஸ்டேஷன் பகுதியில் நெடுஞ்சாலையோரம் மற்றும் சுற்றுவட்டாரம் பகுதி மற்றும் சுங்கம் பகுதிகளில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். தற்போது சேரம்பாடி போலீஸ் ஸ்டேஷன் பகுதியில் நெடுஞ்சாலை சீரமைப்பு பணி நடந்து வருகிறது. பொக்லைன் இயந்திரம் மூலம் சாலை விரிவாக்கம் செய்யும்போது குழாய் உடைந்ததால் குடிநீர் இணைப்பு துண்டிப்பு ஏற்பட்டு மக்கள் காலி குடங்களுடன் குடிநீருக்காக அலைந்து வருகின்றனர்.கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் குழாய்களை சீரமைத்து சீரான குடிநீர்விநியோகம் செய்திட சேரங்கோடு ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : police station area ,Cherambadi ,
× RELATED சேரம்பாடி பகுதியில் கூலித்தொழிலாளியை கடித்த மலைப்பாம்பு பிடிபட்டது