×

குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறக்கோரி தர்ணா கம்பத்தில் நடந்தது

கம்பம், மார்ச் 1: கம்பம் வஉசி திடலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கம்பம் கிளை சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறக்கோரி தர்ணா போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் சிராஜூதீன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பசீர்அஹமது முன்னிலை வகித்தார்.

போராட்டத்தில் மாநில பேச்சாளர்கள் சலீம் மற்றும் சேக்மைதீன் கலந்து கொண்டு பேசினர். போராட்டத்தில் பங்கு பெற்றவர்கள் குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என்றும், தமிழக அரசு சட்டசபையில் என்.ஆர்.சிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கோஷமிட்டனர். இந்த தர்ணா போராட்டத்தில் சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED பயிர்களை அழிக்கும் படையப்பா மூணாறு விவசாயிகள், மக்கள் பீதி