×

16ம் நாளாக முஸ்லிம்கள் காத்திருப்பு போராட்டம்

மதுரை, மார்ச் 1: குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறக்கோரி, மதுரை மகபூப்பாளையத்தில் முஸ்லிம்களின் காத்திருப்பு போராட்டம் நேற்று 16ம் நாளாக தொடர்ந்தது. குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறக்கோரியும், சென்னையில் போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதை கண்டித்தும், குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றக்கோரியும், மதுரை மகபூப்பாளையத்தில் கடந்த 14ம் தேதி முதல் பல்வேறு முஸ்லிம்கள் அமைப்பினர் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இப்போராட்டத்தில் பெண்கள், குழந்தைகளுடன் பங்கேற்றுள்ளனர். இவர்கள் நேற்று 16ம் நாளாக காத்திருப்பு போராட்டத்தை தொடர்ந்தனர். இதில் ஈடுபட்டிருப்பவர்கள், குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறக்கோரியும், குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றக்கோரியும் கோஷமிட்டனர்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மதுரை ஓபுளாபடித்துறையில் மாவட்டத்தலைவர் ஹபிபுல்லா தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பெண்கள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதையொட்டி மதுரை மகபூப்பாளையம், ஓபுளாபடித்துறை பகுதிகளில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

Tags : Muslims ,
× RELATED மோடி மீது எடுக்கப்படும் நடவடிக்கை...