×

நிலக்கோட்டையில் முற்றுகை

வத்தலக்குண்டு, மார்ச் 1: நிலக்கோட்டை பேரூராட்சியில் சுமார் 17, 500 வாக்காளர்கள் இடம்பெற்று 15 வார்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு வார்டிலும் எத்தனை வாக்காளர்கள் இருக்கின்றனர் என்பது குறித்த வாக்காளர் பட்டியல் பேரூராட்சி, தாலுகா அலுவலகங்களில் ஒட்டப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் முறைகேடு இருப்பதாக கூறி தெற்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன் தலைமையில் திமுகவினர் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து முற்றுகையை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags : Siege ,landfill ,
× RELATED லட்சக்கணக்கில் விவசாயிகள் முற்றுகை...