×

வாலாஜாபாத் பேரூராட்சி 13வது வார்டில் 6 ஆண்டுகளாக மூடியே கிடக்கும் ரேஷன்கடை கட்டிடம்

வாலாஜாபாத், பிப். 26: வாலாஜாபாத் பேரூராட்சி 13வது வார்டில் பயன்பாடின்றி கிடக்கும் ரேஷன்கடை கட்டிடத்ைத உடனடியாக திறந்து, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. வாலாஜாபாத் பேரூராட்சியின் 15 வார்டுகளில் 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். அனைத்து வார்டுகளிலும் ரேஷன்கடைகள் செயல்படுகின்றன. ஆனால், 13வது வார்டு முன்சிப் நாராயணசாமி தெருவில் கடந்த 2014-15ம் ஆண்டு எம்எல்ஏ பொது நிதியில் இருந்து ₹7.20 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய ரேஷன்கடை கட்டி முடித்து, திறப்பு விழா நடத்தப்பட்டது. ஆனால், அதன்பிறகு, இதுவரை அந்த ரேஷன்கடை கட்டிடத்தை திறக்காமல், கிடப்பில் வைத்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், வாலாஜாபாத் பேரூராட்சி 13வது வார்டு முன்சீப் நாராயணசாமி தெரு மக்களுக்காக இப்பகுதியில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன், புதிய ரேஷன்கடை கட்டிடம் கட்டப்பட்டது. ஆனால், திறப்பு விழாக்கு மட்டும் திறக்கப்பட்ட அந்த கட்டிடம், அதன்பின்னர், பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரவில்லை. இதனால், சுற்று வட்டார தெருக்களில் உள்ள மக்கள் அருகிலுள்ள பகுதிகளில் செயல்படும் ரேஷன்கடைகளை நாட வேண்டிய நிலை உள்ளது. தற்போது, பயன்பாடின்றி கிடக்கும் இந்த கடையை முறையாக பயன்பாட்டுக்கு கொண்டுவர மாவட்ட வட்ட வழங்கல் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : Rashankadai Building ,Walajabad Beer Party ,Ward ,
× RELATED மணலி மண்டலம் 16வது வார்டில் பழுதடைந்த...