×

தாளவாடி அருகே குட்டையில் மூழ்கி வாலிபர் பலி

சத்தியமங்கலம், பிப். 26:   தாளவாடி அருகே உள்ள தொட்டகாஜனூர் கிராமத்தை சேர்ந்த கரியப்பா மகன்  ரவி (24). இவர் தாளவாடியில் உள்ள காய்கறி மண்டியில் தினக்கூலி வேலை செய்து  வந்தார். நேற்று திகினாரை கிராமத்திற்கு சென்ற ரவி அங்குள்ள குட்டையில்  குளிப்பதற்காக இறங்கியுள்ளார். ஆழமான பகுதிக்கு சென்ற ரவி நீச்சல்  தெரியாததால் நீரில் மூழ்கினார். இதைக்கண்ட அப்பகுதி பொதுமக்கள் தாளவாடி  போலீசாருக்கும், ஆசனூர் தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.  இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு துறையினர் குளத்தில் இறங்கி நீரில் மூழ்கி உயிரிழந்த ரவியின் உடலை மீட்டனர். இதையடுத்து தாளவாடி  போலீசார் பிரேத பரிசோதனைக்காக சாம்ராஜ் நகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி  வைத்தனர். வாலிபர் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Dalawadi ,
× RELATED தாளவாடி அருகே கரும்பு தோட்டத்தில் 2...